மூடு

வரலாறு

புதுச்சேரி அல்லது புதுவை எனவும் அழைக்கப்பட்டும் புதுச்சேரி இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியாக உள்ளது. புதுச்சேரி மாநிலம் முன்பு இந்த நகரம் பிரஞ்சு நாட்டின் ஆதிக்கத்தில் இருந்த ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டாத நான்கு பகுதிகளை (புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனம்) கொண்டது. புதுச்சேரியும், காரைக்கால் தமிழ்நாடு மாநிலத்தின் நிலப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. மாகே கேரளா மாநிலத்தின் நிலைப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. ஏனம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நிலைப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது

பிஜப்பூர் சுல்தான் ஆட்சில் வெளியிடப்பட்ட அரச்சனையின்படி பிரெஞ்சு நாட்டினரால் 1693- ல் துவக்கப்பட்ட “பிரெஞ்சு கிழக்கு இந்திய கம்பெனி” மூலம் புதுச்சேரி நகரத்தின் அட்டித்தலம் அமைக்கப்பட்டடு ள்ளது. 04.02.1673-இல் பிரஞ்சு கம்பெனி பிரான்கோயில் மார்டின் என்பவரை முதல் கவர்னராக நியமித்தது. அவரே சிறு மீனவ கிராமமாக இருந்த புதுச்சேரியை பெரிய துறைமுக நகரமாக உருவெடுக்கும் கனவு திட்டத்தை துவக்கினார்.

1674-இல் பிரஞ்சு கிழக்கு இந்திய கம்பெனி கவர்னர் பிரான்கோயில் மார்டின் புதுச்சேரில் வர்த்தக மையத்தை அமைத்தார். அதுவே, இந்திய நாட்டின் தலைமை பிரஞ்சு பகுதியாக பின்னாளில் அமைந்தது. அக்காலகட்டத்தில் இந்தியாவுடனான வர்த்தக பங்களிப்பு தொடர்பாக ஐரோப்பா நாடுகளுடையே போர் மூண்டது. ஆதலால் புதுச்சேரி 1693-ஆம் ஆண்டு டச்சு நாட்டினரால் பிடிக்கப்பட்டது. பின்னர் 1699-ஆம் ஆண்டு “டிர்ட்டி ஆப் ரிஸ்விக்” ஒப்பந்தத்தின்படி பிரஞ்சு கம்பெனி மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. 1720-1738-ஆம் காலகட்டத்தில் பிரஞ்சு கம்பெனி மஃஹே, ஏனாம் மற்றும் காரைக்கால் பகுதிகளை தன்னுடையதாக்கியது. 1742-1763-இல் ஏற்பட்ட ஆங்கிலோ – பிரஞ்சு போரின் போது ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனிக்கு கைமாறிய புதுச்சேரி, பின்னர் 1763 -ஆம் ஆண்டில் ஏற்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தின்படி மீண்டும் பிரஞ்சு கம்பெனி நிர்வாத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

1793 – இல் ஏற்பட்ட பிரஞ்சு புரட்சியின் பிறகு ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனிக்கு மாறிய புதுச்சேரி பின்னர் 1814-ஆம் ஆண்டு பிரஞ்சு கிழக்கு இந்திய கம்பெனி நிர்வாத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இந்தியாவின் பிறபகுதிகளில் ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனின் ஆதிக்கம் அதிகமானாலும் புதுச்சேரி, காரைக்கால், மஹே, ஏனாம் மற்றும் சந்திரநாகூர் ஆகிய பகுதிகள் மட்டும் பிரஞ்சு கிழக்கு இந்திய கம்பெனி நிர்வாகத்தின் கீழ் செயல்பட அனுமதித்தனர்.

1947-ஆம் ஆண்டு சுதந்திர இந்தியா உத்வேகத்துடன் இந்தியா அரசும் மற்றும் பிரஞ்சு அரசும் சேர்ந்து 1948 -ஆம் ஆண்டு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டனர். அதில் குறிப்பிட்ட காலதிற்கு பிறகு இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தை தாங்கலே தேர்ந்து எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. 1954-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி உடன்படிக்கையின் படி புதுச்சேரி, காரைக்கால், மஹே, ஏனாம் மற்றும் சந்திரநாகூர் ஆகிய பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைத்த பகுதிகளை மாறியது. இது 1963 -ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் சந்திரநாகூர் பகுதி மேற்கு வங்க மாநிலத்தில் இணைக்கப்பட்டது. புதுச்சேரி, காரைக்கால், மஹே மற்றும் ஏனாம் பகுதிகள் ஒருங்கிணைந்து நடுவண் அரசின் ஒன்றிய பகுதியாக புதுச்சேரி யூனியன் பிரதேசமாக மாறியது.